News
   
   LLRC

   Statistics

   Gazette

   Organizational  Structure

   

 

  
   Administrative and HRD 

   Accounting / Financial and Audit
   
   Planning and Monitoring
  
   Regulatory
 




   
   2012 
  
   2011
  
   2010
 
   2009
  
   2008
 

 



   Citizens' / Clients' Charter English
 




     
   2012
 
   2011
 
   2010


CLICK HERE TO GO TAMIL NEWS PAGE AND SINGHALA NEWS PAGE 








.
Download Fonts


குடிநீ்ர் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பிலான செயற்திட்ட வெளியீடு


2013-02-13 திகதி மீள்குடியேற்ற அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்ட கருத்தரங்கின்போது குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் முகமாக அமைச்சினால் தயாரிக்கப்பட்ட செயற்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.  மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. எம்.எம்.நயீமுதீன் அவர்களினால் ரூபா.116 இலட்சம் செலவில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின் விபரங்களை இங்கு விளக்கிக் கூறியுள்ளார்.

வடக்கு  கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக பாதிப்புற்று மீள குடியேற்றப்பட்ட மக்களுக்கான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது புதிய திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

தனது நீண்ட கருத்துக்களை முன்வைத்த மேலதிகச் செயலாளர் திரு. நயீமுதீன் அவர்களினால் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்தல், உரிய மாவட்டத்தில் மீள குடியமர்த்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்பட்டுள்ளது என விளக்கிக் கூறினார். எவ்வாராயினும் சம்பநதப்பட்ட மாவட்டங்களின் திட்டப் பணிப்பாளர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்ட ,க் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை கவனத்தில் கொண்டு பிரதேசவாரியாக தேவைகளை கவனத்தில் கொண்டு குடிநீர் அல்லது சுகாதார வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும்போது, இவ்விரண்டு துறைகளில் மிக முக்கியமான துறையை தெரிவு செய்வதற்கு மாவட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டன.

தற்போது முன்மொழியப்பட்டுள்ள குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் திட்டத்திற்கு மேலதிகமாக இக் கருத்தரங்கின்போது, 2013-ம் ஆண்டிற்கான மீள்குடியேற்ற அமைச்சின் மொத்த அபிவிருத்தித் திட்டம், 2013  2016 காலக்கட்டத்திற்கான அமைச்சின் கூட்டிணைந்தத் திட்டம், மொத்த அளவில் தற்போது தீர்க்கப்படாத வீடமைப்பு பிரச்சினை, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள், மீளகுயமர்த்தப்பட்ட மக்களின் ஏனைய தேவைகளும் மீள்குடியேற்றம் சம்பந்தமாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் செய்யப்பட்ட சிபாரிசினை அமுல்படுத்துவது தொடர்பில் உரிய முன்னேற்றங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.

உவ்வொரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டத்தில் கலந்துகொண்ட உத்தியோகத்தர்கள், இக் கூட்டம் முக்கியம்வாய்ந்ததென குறிப்பிடப்பட்டதுடன், மீள் குடியேற்ற அமைச்சுடன் எப்பொழுதும் இடைக்கால உறவுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான கருத்தரங்குகள் நடாத்துதல், இடம்பெயர்ந்து தற்போது மீள குடியமர்த்தப்பட்டுள்ள மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகைளை தீர்த்து வைப்பதற்கு பெருந் துணையாக இருக்குமென கருத்து தெரிவித்தனர்.

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திரு. ஜனக சுகததாச இக் கருத்து தெரிவிக்கையில், எதிர்காலத்தில் இவ்வாறான கூட்டத் தொதடர்களை அடிக்கடி நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு, மாவட்டச் செயலகங்களுடன் சிறந்த இணைப்பிணை ஏற்படுத்துவதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதாகவும் கூறினார். இதேபோன்று குடிநீர் மற்றும் சுகாதார நடவடிக்கைகளுக்கான திட்ட அறிக்கைகள் தயாரித்தலும் அதனை சமர்ப்பிக்கும்போது மாவட்ட திட்ட பிரிவுகள் மேற்கொள்ளும் மேலதிக பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்களையும் பாராட்டி திரு. ஜனக சுகததாச அவர்கள் இவ்வாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத கருத்திட்டங்களுக்கு தேவையான ஒதுக்கீட்டினை 2014-ம் ஆண்டு பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலும் கூறினார். Click here to view more photos>>

 


13.02.2013

Home | About Us | LLRC | Refugees | IDPs | Projects | Current Events | Development Work | Publications | Gallery | Contact Us
© 2007 - 2013 Sri Lanka - Ministry of Resettlement. Powered by Web Genius
Page: ministry of resettlement, tamil events, news, - Last Updated: 24th May, 2013 | Site Map